Saturday, November 5, 2016

வெஞ்சனம்

இங்க குடுக்கற அளவு எல்லாமே ரெண்டு பேருக்கானது.

தேவையானது:
புளி ஒரு எலுமிச்சம் பழம் அளவு.
மிளகாய் வற்றல் - (காரத்திற்கேற்ப 10 to 12 வரை)
தனியா 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
ஜீரகம் - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
தேங்காய் 1 நன்கு துருவி கொள்ளவும்
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 nos.
கத்திரிக்காய் - 1/4 to 1/2 கிலோ (வாழைகாய், கொத்தவரை, அவரை போன்ற காய்களும் போடலாம் அனால் கத்திரிக்காய் போட்டால் சுவையே அலாதி தான்)

செய்முறை:
தனியா, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், ஜீரகம், எல்லாவற்றையும் தனி தனியாக நல்லெண்ணையில் வறுககவும். பெரிய வெங்காயத்தையும் நறுக்கி, வறுத்து வாய்த்த சாமான்களுடனும் துருவிய தேங்கையுடனும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். நைசாக அரைக்க கூடாது, நற நற என்று அரைத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை நன்கு குழைய வேக விடவும். சின்ன வெங்காயத்தை நல்லெண்ணையில் வதக்கி கொள்ளவும். புளியை கரைத்து அது கொதிக்கும் போது, வதக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கின கத்திரிக்கையை போட்டு புளி தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும். புளியின் பச்சை வாசானை போன உடன் அரைத்த விழுது, நன்கு கரைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து நுரைத்து வந்த உடன், இறக்கி, கறிவேப்பிலை போட்டு, அதன் தலையில் தாளித்து கொட்டவும்.

அவரைப் பருப்பு என்று ஒரு பருப்பு உண்டு. இந்த அவரைப்  பருப்பை போட்டு வெஞ்சனம் வைத்தால், இன்னும் மிகவும் சுவையாக இருக்கும். தட்டைப் பருப்பும் சேர்க்கலாம்.

வெங்காயம், கத்திரிகாயை கண்டிப்பாக சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி போடவும். சின்ன வெங்காயம் போட்டால் கூடுதல் சுவை.

மிளகு ஜீரகம் மற்றும் அவரை பருப்பு போடுவதால் வெஞ்சனம் என்று பெயர். குடியானவர்களின் உணவு இது. கெட்டியாக செய்து களியுடன் உண்பார்களாம்.

No comments:

Popular Posts

Featured Post

Manathakkali Vathal Pathiya Kuzhambu