வெரி குட் சாம்பார் செய்ய தேவையான வெந்தயப்பொடி செய்வது எப்படி?

சாம்பார் சுவைப்பதற்கு சாம்பார் பொடியில் கலந்திருக்கும் வெந்தயப்பொடி ஒரு முக்கிய காரணம்.  இதை தனியாக வைத்தும் உபயோகிக்கலாம்.  திடீர் சாம்பாருக்கு இது மிக அவசியம். இதை செய்வது மிகவும் சுலபம். 

ஒரு அரை கப் வெந்தயத்தை வாணலியில் போட்டு பிரவுன் கலராக மாறும் வரை வறுக்க வேண்டும்.  எண்ணெய் விட தேவையில்லை.  அதே போல் ரொம்ப கருப்பாக ஆகும் வரையும் வறுக்கத் தேவையில்லை. லைட் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் நன்கு ஆரியவுடன் மிக்சியில் மையாக அரைத்து ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கவும். 

தினமும் சாம்பார் செய்து முடித்து மூடி வைக்கும் முன்னர் அரை ஸ்பூன் வெந்தய பௌடரை சாம்பார் மேல் போட்டு ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்தால் சாம்பார் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பசியையும்  தூண்டும். 

No comments: