அரிசி தேங்காய் பால் கஞ்சி

தேவையானவை
பச்சரிசி - 1  டம்ளர் 
வெந்தயம் - 1  ஸ்பூன் 
பூண்டு - 4  பல்
தேங்காய் பால் - 1  கப்
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:
அரிசியை நொய்யாக உடைத்து 1  டம்பளர்க்கு 3  டம்பளர் தண்ணீர், வெந்தயம், பூண்டு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். நன்றாக 3 விசில் வர வேண்டும். குக்கரை திறந்த பின் வெந்த அரிசியுடன் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சுவையான சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார். 

காலை சிற்றுண்டிக்கு ஏற்ற சந்தன உணவு. உடல் நிலை சரி இல்லாதவர்கள் தேங்காய் பாலை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. கர்பிணி பெண்களும், குழந்தை பெற்ற தாய் மார்களுக்கும் எளிதாக ஜீரணிக்க கூடிய உணவு. பசியின்மையை போக்கி விடும். 

No comments: