பனீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
பால்          -    ஒரு லிட்டர் 
தண்ணீர்  -     அரை கப் 
எலுமிச்சம் பழ சாறு - அரை டீஸ்பூன்.

செய்முறை:
முதலில் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும்.  இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சம் பழ சாற்றை கலந்து வைக்க வேண்டும்.  பால் நன்கு பொங்கி வரும் போது எலுமிச்சம் பழ சாற்றை அதன் மேல் விட்டு அடுப்பை சிறிதாக்கி மேலும் கொதிக்க விட வேண்டும். பால் திரி திரியாக தயிர் போல வரும்.  தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்  பின் நன்றாக கெட்டியாக ஆன வுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விட வேண்டும். கட்டியும் தண்ணீருமாக இருக்கும் இதை ஒரு மஸ்லின் துணியில் விட்டு மூட்டை போல கட்டி தண்ணீரில் அலம்பி பின் அதை ஒரு ஆணியில் தொங்க விட வேண்டும்.  இப்படி செய்வதால் அதில் இருக்கும் தண்ணீர் சுத்தமாக வடிந்து கட்டியாக இருக்கும்.  இப்படி வடியும் தண்ணீரில் நிறைய புரோட்டின்கள் இருப்பதால் அந்த தண்ணீரை சப்படி மாவு பிசைவதற்கோ சைடு டிஷ் பண்ணும்போது தண்ணீருக்கு பதிலாகவோ சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் முழுவதுமாக வடிந்தவுடன் அந்த மூட்டையை ஒரு தட்டில் பரத்தி அந்த மஸ்லின் துணியின் மீது ஒரு நல்ல கனமான பொருளை வைத்து ஒரு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டங்களாக வெட்டி ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டால் போதும்.  ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.  

இதை வைத்து பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர் மற்றும் ஆலு மட்டர் போன்ற பல சைடு டிஷ்கள் தினம் ஒன்றாக செய்து அசத்தலாம். 

No comments: