Saturday, June 21, 2014

வெருசெனேக பொடி (வேர்கடலை கொப்பரை பொடி)

ஆந்திராவிலிருந்து நம்மூருக்கு வந்திருக்கும் அருமையான பொடி இது.  
இதற்கு தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - ௨ கப்
ஜீரகம் - ௨ டீஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 8 
கொப்பரை - அரை மூடி (உலர்ந்த தேங்காய்)
பூண்டு   பல்     -  15 
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கருவேப்பிலை  -  சிறிதளவு 
உப்பு            - தேவைக்கேற்ப 

செய்முறை :

முதலில் வேர்க்கடலையை எண்ணையில்லாமல் வறுக்கவும். சிறிது ஆறியவுடன் கைகளின் நடுவில் வைத்து தேய்த்தால்
 வேர்க்கடலையின் மேல் தோல் தனியாக வரும், அதை நீக்கி விடவேண்டும். பின்னர் அதே வாணலியில் எண்ணை விட்டு
 மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.   பின்னர் மிக்சியில் 
வேர்க்கடலையோடு சேர்த்துப் பொடித்து ஒரு ப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.  

சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. 

No comments:

Popular Posts

Featured Post

Manathakkali Vathal Pathiya Kuzhambu